உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகேவிவசாயி வீட்டில் நகை -பணம் கொள்ளைமேலும் 3 வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை

Published On 2023-09-30 09:24 GMT   |   Update On 2023-09-30 09:24 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
  • இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 )விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஊருக்குள் ஒரு வீடும், விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது.பகலில் ஊருக்குள் இருக்கும் வீட்டிலும், இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வழக்கம்போல் தூங்கிவிட்டு காலை மீண்டும் ஊருக்குள் உள்ள வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணமும் அைர பவுன் நகையும், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள மேலும் 3 வீடுகளிலும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News