சின்னசேலம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கி விற்ற 2 பேர் கைது
- கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடகனந்தல் ஊரைச் சேர்ந்த தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்வதாக கச்சிராயபாளையம் போலீசருக்கு தகவல் வந்தது. அதன்படி சப்இன்ஸ்பெக்டர் ராமர் வடக்கனந்தல் தோப்புத் தெருவில் உள்ள ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர.
அப்போது அருகில் 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல் வடக்க நந்தல் கடை தெரு போகும் பாதையில் உதயசூரியன் அவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்து வருகிறார் என்ற தகவல் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தெரியவந்தது.
அதன் அடிப்படையில் கச்சிராயபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ர் ஏழுமலை கடைத்தெரு போகும் பாதை உதயசூரியன் வீட்டிற்கு சென்று சோதனைசெய்தனர்.
அங்கு 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆறுமுகம், உதயசூரியன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.