உள்ளூர் செய்திகள்
புவனகிரி அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
- புவனகிரி அருகே கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
- இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரியில் குறிஞ்சிப்பாடி சாலையான வயல்வெளி பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலை மர்ம நபர்கள் சென்றனர். கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். பின்னர் அதனை அங்குள்ள வயல் வெளியில் வீசி சென்று தலைமறை வானார்கள். இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் உண்டி யல் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதுகுறத்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குபதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த கும்பலை தேடி வருகிறார்கள்.