உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

Published On 2022-12-08 14:54 IST   |   Update On 2022-12-08 14:54:00 IST
  • பொருட்கள் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
  • மடம் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அங்கமுத்து படுகாயம் அடைந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள புதுக்கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது50). ஒேகனக்கல் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை தங்கி இருந்து மேய்த்து வந்தார்.

சமையல் பொருட்கள் வாங்குவதற்காக இவர் நேற்றுமாலை பென்னாகரம் வந்தார். பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மடம் பகுதியில் வந்த போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் அங்கமுத்து படுகாயம் அடைந்தார். இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக அங்கமுத்து உயிரிழந்தார்.

இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

Tags:    

Similar News