உள்ளூர் செய்திகள்

அதியமான்கோட்டை அருகே சாணி பவுடர் குடித்து திருநங்கை தற்கொலை

Published On 2022-09-10 09:50 GMT   |   Update On 2022-09-10 09:50 GMT
  • சாணி பவுடரை குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.
  • அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை புறவடை பகுதியில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மன்னார்குடியை சேர்ந்த செல்வம் என்பவரது மகளான ரிஷிகா என்ற திருநங்கை வந்து வசித்து வந்தார்.

இந்நிலையில் சாணி பவுடரை குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.அவரை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது செல்போனில் சாணி பவுடரை ஸ்டேட்டஸாக ரிஷிகா வைத்திருந்தாராம்.

Tags:    

Similar News