உள்ளூர் செய்திகள்
குன்னூர் கல்லூரியில் மாணவிகள் நவராத்திரி நடனம்
- துர்காதேவி, சிவன் உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தல்
- பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது
அருவங்காடு,
இந்தியாவில் நவராத்திரி விழா 9 நாட்கள் நடக்கும். அப்போது அம்மனின் 9 அவதாரங்களை நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதனைமுன்னிட்டு குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகள் கடவுள் வேடங்களான துர்காதேவி, சிவன், கர்நாடகாவின் கிராம கடவுள் காந்தாரா உள்ளிட்ட வேடங்களை தத்ரூபமாக அணிந்து நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பழங்கால ராணிகள் போல உடையணிந்து வந்து அணிவகுப்பும் நடத்தப்பட்டது.