உள்ளூர் செய்திகள்

காரமடையில் தேசிய இளைஞர் தின மாரத்தான் போட்டி

Published On 2023-01-22 09:18 GMT   |   Update On 2023-01-22 09:18 GMT
  • சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
  • போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா, காரமடை மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் விவேகானந்தர் பசுமை இயக்கம் சார்பில் தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதற்கு காரமடை மேற்கு ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட பொதுக்குழு செயலா ளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ், மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக காரமடை ஸ்ரீ விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். மாரத்தான் போட்டி மருதூர் பெட்ரோல் பங்கில் தொடங்கி வெள்ளியங்காடு பகுதியில் உள்ள போரேகவுடர் திருமண மண்டபத்தில் முடிவுற்றது.

இதில் காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கதிர்வேல், மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட தலைவர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

Similar News