வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.
கால்நடை மருத்துவ கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
- நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
நெல்லை:
நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை மருத்துவ மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் சங்கத்தின் 9-ம் ஆண்டு மாநாடு மற்றும் நவீன உயிர்தொழில்நுட்பவியல் மூலம் கால்நடை மற்றும் கோழியினங்களின் உடல்நலன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் என்ற தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் தலைமை தாங்கி இக்கருத்தரங்கின் போது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
டாக்டர் ஏ.ஜே.தாமி சிறப்பு இறுதி அறிக்கையை சமர்பித்தார். முன்னதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) எட்வின் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் 29 விஞ்ஞானிகள், 40 முதுநிலை மாணவர்கள் மற்றும் 10 இளநிலை விஞ்ஞானிகள் உள்பட 79 பேருக்கு சிறந்த ஆய்வு கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.