உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராம் பள்ளியில் தேசிய தபால் தினம்

Published On 2023-10-11 15:44 IST   |   Update On 2023-10-11 15:44:00 IST
  • பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தபால் அலுவல கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
  • சாரதி மகாலிங்கம் மாணவர்களின் செயல்முறைகளைப் பாராட்டினார்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் தேசிய தபால் தினம் அனுசரிக்கப்பட்டது. உண்மையான தபால் நிலையம் போல் ஒரு வகுப்பறை மாற்றப்பட்டு மாணவர்களை தபால் நிலைய ஊழியர்கள் போல் நியமித்து தபால் அலுவலகத்தின் செயல்பாடு கள் விளக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஒரு அஞ்சல் அட்டை கொடுக்கப்பட்டு விருப்பம் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதி தபால் பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தப் பட்டது. இவ்விழாவினை பள்ளி யின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமையேற்று தொடங்கி வைத்தனர்.

பள்ளி நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி மாதிரி தபால் அலுவல கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். முதல்வர் சாரதி மகாலிங்கம் மாணவர்களின் செயல்முறைகளைப் பாராட்டினார். இவ்விழாவினை ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களாகிய சதீஸ், முத்துச்செல்வி, சேனு, விக்னேஷ், ஆகாஷ் ஆகியோரின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Similar News