உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் அருகே வீடுகள் தோறும் தேசிய கொடி
- 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
- ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்,ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கினர்
தென்காசி:
கீழப்பாவூர் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி யில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி, துணைத்தலைவர் மகேஷ்வரி மற்றும் ஊராட்சி செயலர் சவுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஊராட்சி பணியாளர்களுடன் இணைந்து வீடுகள் தோறும் தேசிய கொடிகளை வழங்கி னர். இதில் ஆவுடையானூர் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.