உள்ளூர் செய்திகள்

விஷக்கதண்டு அகற்றம்

Published On 2023-09-08 12:57 IST   |   Update On 2023-09-08 12:57:00 IST
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது.
  • தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக செல்பவர்களை விஷக்கதண்டுகள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து விஷக் கதண்டுகளை அகற்றிதருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்

Tags:    

Similar News