உள்ளூர் செய்திகள்

கோப்பனம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி அம்மன், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஆடி 3-வது வெள்ளி கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-08-04 07:11 GMT   |   Update On 2023-08-04 07:11 GMT
  • ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
  • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்:

ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்ட வற்றை படைத்து வழிபட்டனர்.

இதேபோல், செல்லாண் டியம்மன், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன், அன்பு நகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டி செட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்ன அலங்காரம்

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய் யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட் டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தீபாராதனை

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்க ரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி, பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டி யம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூர் எல்லையம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வட கரையாத்தூர் மாரி யம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

பால்குட ஊர்வலம்

சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி மாரி யம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

இதேபோல் பச்சுடை யாம்பட்டி காளியம்மன், காந்திபுரம் கருமாரி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரி யம்மனுக்கு ஆடி வெள்ளியை முன் னிட்டு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு, பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News