உள்ளூர் செய்திகள்

காலில் கல் விழுந்து கறிக்கடைக்காரர் சாவு

Published On 2023-08-23 15:01 IST   |   Update On 2023-08-23 15:01:00 IST
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா செக்குப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவர் கூடசேரியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
  • நடராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா செக்குப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவர் கூடசேரியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது சுவற்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹாலோ பிளாக் சிமெண்ட் கல் நடராஜின் காலில் விழுந்தது.

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வியாபாரம் செய்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கல் விழுந்து அடிபட்ட கால் வீங்கி இருந்தது.

அதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 கிட்னிகளும் பழுதடைந்து விட்டதாக கூறி நடராஜை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நடராஜின் மனைவி வசந்தி (43) நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News