உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் சூதாடிய 6 பேர் கைது

Published On 2023-07-28 12:46 IST   |   Update On 2023-07-28 12:46:00 IST
  • நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
  • மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த நாமக்கல் பழையபாளையத்தை சேர்ந்த கமலகண்ணன் (47), வீசாணம் சந்திரகுமார் (42), தூசூர் வீரகுமார் (38), வெள்ளாளத்தெரு அருள் (50), கிழக்கு வீதி மணிராஜ் (26), கோம்பை தெரு பாஸ்கர் (40) ஆகிய 6 பேரை பிடித்து போலீசார் கைதுசெய்தனர். மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News