உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-11-16 08:33 GMT   |   Update On 2023-11-16 08:33 GMT
  • கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
  • இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி காமாட்சி (25). கூலித் தொழிலாளர்கள்.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காமாட்சி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

தீக்குளிப்பு

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார் . உடலில் தீப்பற்றி எரியவே வலி தாங்க முடியாமல் காமாட்சி சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து காப்பாற்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாபமாக இறந்தார்

இந்த நிலையில் காமாட்சி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காமாட்சிக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆவதால் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகன்யா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News