உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

Published On 2023-10-24 10:13 GMT   |   Update On 2023-10-24 10:17 GMT
  • பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
  • சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தார் சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News