உள்ளூர் செய்திகள்

வேலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தபோது எடுத்த படம்.

வேலூர் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Published On 2023-05-28 08:13 GMT   |   Update On 2023-05-28 08:14 GMT
  • வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது.
  • இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே கிடக்கும் கழிவுகளில் கொசுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News