உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Published On 2023-11-18 10:06 GMT   |   Update On 2023-11-18 10:06 GMT
  • சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
  • 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் உரம்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

பூட்டு உடைப்பு

இதையடுத்து நேற்று காலையில் சுப்பிரமணி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.

இதுபற்றி மங்களபுரம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News