கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
- சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.
- அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சின்னகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60) விவசாயி.
இவர் நேற்று இரவு சின்னக்கரசபாளையம் கூலக்காடு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதனிடையே இரவு வெகுநேரம் ஆகியும் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது பாலசுப்பிரமணியன் செருப்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் தேடி பாலசுப்ரமணியனை பிணமாக மீட்டனர். பின்னர் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் உடலை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.