டாஸ்மாக் பார் உரிமையாளரை தாக்கி; பாரை சூறையாடிய மர்ம நபர்
- பழைய பை-பாஸ் சாலையில் அபிராமி தியேட்டர் எதிரே டாஸ்மாக் அரசு மதுபான கடை உள்ளது. கடையின் பின்புறம் அரசு அனுமதி பெற்ற பார் நடக்கிறது.
- உருட்டுக்கட்டையுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், பார் கதவை உடைத்து எறிந்து, அங்கு இருந்த கண்ணாடி பாட்டில் களையும், ஜாடிகளையும் உடைத்து தூக்கி எறிந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் அபிராமி தியேட்டர் எதிரே டாஸ்மாக் அரசு மதுபான கடை உள்ளது. கடையின் பின்புறம் அரசு அனுமதி பெற்ற பார் நடக்கிறது.
இதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த சங்கர் (வயது 46) என்பவர், இந்த பாரை நடத்தி வருகிறார். நேற்று சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் சங்கர் சமையல் கூடத்தில் பாருக்கு தேவையான உணவு பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தார்.
அப்போது உருட்டுக்கட் டையுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், பார் கதவை உடைத்து எறிந்து, அங்கு இருந்த கண்ணாடி பாட்டில் களையும், ஜாடிகளையும் உடைத்து தூக்கி எறிந்தார். பாட்டில்கள் உடைபடும் சத்தம் கேட்டு பார் உரிமை யாளர் சங்கர் வெளியே வந்தார். அப்போது சங்கரை கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சங்கர் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். இப் புகார் குறித்து பரமத்திவேலூர் போலீசார் பாரை அடித்து நொறுக்கி, பாரின் உரிமை யாளரை தாக்கிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிக போக்குவரத்து நடமாட்டம் உள்ள பழைய பை-பாஸ் சாலையில் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுயிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை போலீசார் கண்காணித்து மர்ம நபர்களின் நடமாட் டத்தை கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.