உள்ளூர் செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

Published On 2023-11-23 07:29 GMT   |   Update On 2023-11-23 07:29 GMT
  • தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.
  • இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் தற்கொலை

வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எர்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மஞ்சகண்ணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயன் (18) என்பவர் தங்கி பயின்று வந்தார்.

இவர் கடந்த 18-ந் தேதி கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்மந்தமாக விஜயனின் தந்தை செல்வராசு வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விஜயனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு (வீடியோ பதிவுடன்) செய்யப்பட்டு 19-ந் தேதி அவரது தந்தை செல்வராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடவடிக்கை

இந்த வழக்கு சம்மந்தமாக இன்ஸ்பெக்டர் செல்வராஜ் முறையாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மாணவர் இறப்பு சம்பந்தமாக தவறான வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

வதந்திகள் பரப்புவோர் பற்றிய விவரங்கள் சமூக ஊடக பிரிவினர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News