உள்ளூர் செய்திகள்

கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டி சாய்பாபா குருபூஜை

Published On 2023-10-25 07:11 GMT   |   Update On 2023-10-25 07:11 GMT
  • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
  • காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News