கபிலர்மலை பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
- பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம் பாளையம், பெரியமருதூர்,சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.