உள்ளூர் செய்திகள்

பெரியண்ணசாமி கோவிலில்மண்டல பூஜை நிறைவு விழா

Published On 2023-09-12 13:41 IST   |   Update On 2023-09-12 13:41:00 IST
  • மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது.
  • அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.

நாமக்கல்:

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரியின் வடகரையில் அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னி மார் சுவாமிகளுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கும்பாபி ஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடை பெற்றது.நேற்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு காலை நன் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து அரசமர விநாயகர், மாசி பெரியண்ணசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.மண்டல பூஜை 12 நாள் நிறைவு விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News