மோகனூர் அருகே சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்துஉடல் கருகிய டீக்கடைகாரர் சாவு
- சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார்.
- கடைக்கு டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று டீக்கடையில் இருந்த சிலிண்டரில் கியாஸ் தீர்ந்து விட்டது.
இதையடுத்து கடைக்கு டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார். அப்போது அருகில் விறகு அடுப்பில் தீ எரிந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கியாஸ் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் சப்பாணி மற்றும் கணேசன் ஆகியோர் தீயில் கருகினர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்கம், பக்கத்தினர் சேர்த்தனர்.
இதில் சப்பாணியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் உறவினர்கள் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலையில் சப்பாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.