உள்ளூர் செய்திகள்

மளிகை கடைகளில் மருந்து பொருட்கள் விற்கக் கூடாது

Published On 2023-07-19 07:25 GMT   |   Update On 2023-07-19 07:25 GMT
  • மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
  • உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.

நாமக்கல்:

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு முறையான உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.

அதனால், வணிகர்கள், உரிமம் பெறாமல் மருந்து பொருட்களைவிற்பனை செய்ய வேண்டாம். அதேபோல், எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும், கடைகளில் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News