உள்ளூர் செய்திகள்

ராஜாவாய்க்காலில் மூழ்கி இறந்த கார்த்திகேயன்

ஜேடர்பாளையம் ராஜவாய்க்காலில் மூழ்கி திருச்செங்கோட்டை சேர்ந்த கூரியர் ஊழியர் சாவு

Published On 2023-06-20 06:56 GMT   |   Update On 2023-06-20 06:56 GMT
  • கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
  • அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 28). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் நேற்று பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தில் உள்ள அண்ணா பூங்கா படுகை தடுப்பு அணை பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்துக் கொண்டு இருந்த போது கார்த்திகேயன் மட்டும் ராஜவாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் நீச்சல் தெரியாததால் வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடினார். பின்னர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கும், நாமக்கல் தீயணைப்பு துறையி னருக்கும் தகவல் கொடுத் துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுழலில் சிக்கி ராஜவாய்க் காலில் இறந்து போன கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக் கப்பட்டு கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News