வீசாணம் நீர்வரத்து கால்வாயினை மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு செய்த போது எடுத்த படம்.
நாமக்கல் அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
- நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 18-ல் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, செயல் அலுவலர் சக்திவேல், என்ஜினீயர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 13-ல், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தை அமைக்கும் பணியினையும், மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 18-ல் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி பேரூராட்சி வாரச்சந்தை, பொது கழிப்பிடம் ஆகிய இடங் களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு சுத்த மாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், அலங்காநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அ.பாலப்பட்டி அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளை பார்வையிட்டு, அங்கிருந்து மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, செயல் அலுவலர் சக்திவேல், என்ஜினீயர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.