உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் பலி

Published On 2023-06-06 13:11 IST   |   Update On 2023-06-06 13:11:00 IST
  • கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவர் சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News