உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே உறவினரை கத்தியால்குத்திய தொழிலாளி கைது

Published On 2023-08-06 07:49 GMT   |   Update On 2023-08-06 07:49 GMT
  • பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார்.
  • இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார்.

நாமக்கல்:

நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

கத்திக்குத்து

இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடைேய திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது செந்தில்குமர னின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கைது

இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News