உள்ளூர் செய்திகள்
மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
- பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
- இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.