உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் சங்க தலைவர் பத்ரிநாராயணன் பேசிய போது எடுத்த படம்.

நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக்கூட்டம்

Published On 2022-10-01 07:27 GMT   |   Update On 2022-10-01 07:27 GMT
  • நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

நாமக்கல்:

நாமக்கல் நகர மளிகை வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் குமரன் ஹோட்டலில் சங்க தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் மளிகை கடைகளில் மேற் கொள்ளும் திடீர்சோதனை குறித்தும். வரும் காலங்களில் கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. பில்லுடன் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் அருண்குமார் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி பில் மூலம் விற்பனை செய்வதுகுறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் நாம க்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் மற்றும் மாவட்ட , நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News