உள்ளூர் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய நாகாவதி அணை

Published On 2022-09-05 14:55 IST   |   Update On 2022-09-05 14:55:00 IST
  • 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
  • முழு கொள்ளளவு எட்டி அணை நிரம்பி வழிந்து வருகிறது.

தொப்பூர்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகாவதி அணை தொடர் மழையின் காரணமாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர்வரத்தும் வந்ததாலும் நேற்று மாலை முழு கொள்ளளவு எட்டி அணை நிரம்பி வழிந்து வருகிறது.

இதனால் நாகாவதி அணையின் மூலம் பாசனத்தை நம்பி இருக்கும் அரகாசனஹள்ளி, சின்னம்பள்ளி பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகாவதி அணையின் மூலம் 1993 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Tags:    

Similar News