உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2022-06-06 08:04 GMT   |   Update On 2022-06-06 08:04 GMT
  • பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
  • பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் . மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

முன்னதாக வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் 250 நபர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .பின்னர் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

Tags:    

Similar News