உள்ளூர் செய்திகள்

நாகையில் 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் - கலெக்டர் தகவல்

Published On 2022-06-09 10:00 GMT   |   Update On 2022-06-09 10:00 GMT
  • முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News