உள்ளூர் செய்திகள்
வால்பாறையில் குப்பைகளை சுத்தம் செய்த நகராட்சி துணைத்தலைவர்
- நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார்
- தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.
வால்பாறை,
வால்பாறை நகராட்சி துணை தலைராக செந்தில் குமார் பதவி வகித்து வருகிறார்.
11வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் அங்கு குப்பைகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து அவர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் செந்தில்குமார் இன்று 11வது வார்டு பகுதிக்கு வந்தார். அங்கு தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.
வால்பாறை நகராட்சி துணைத்தலைவரே நேரடியாக களமிறங்கி குப்பைகளை அகற்றியது பொதுமக்களிடம் பாராட்டுதலை பெற்று உள்ளது