உள்ளூர் செய்திகள்
மலைரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
- உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஊட்டி,
உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் மலை ரயிலில் வந்திருந்த 140 பயணிகளுக்கு மாவட்ட சுற்றுலாத்துறை சாா்பில் ரோஜா மலா் கொடுத்தும், சுற்றுலா கையேடுகள் மற்றும் இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து மலைரயில் பாதுகாப்புஇயக்கம் சாா்பில், ஊட்டியில் இருந்து குன்னூர் வரை பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா். நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.