உள்ளூர் செய்திகள்

குப்பை கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-05-31 04:11 GMT   |   Update On 2023-05-31 04:11 GMT
  • தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.
  • ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது.

ஒரகடம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இதே ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது.

இந்த நிலையில் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனங்களை ஓட்டி அவதி அடைந்து விபத்து ஏற்படும் வகையில் செல்கின்றனர்.

இதனால் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதிப்படைகின்றனர். இதனால் மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே குப்பைக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News