உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்.

கடலூரில் மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-07-21 14:59 IST   |   Update On 2022-07-21 14:59:00 IST
  • கடலூரில் மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளளாகினர்.
  • உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை.

கடலூர்:

கடலூர் மாவட்டம் தொழிற்சாலை அதிகம் உள்ள பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய பெற்று உள்ளது. சிப்காட் அருேக கடலூர் துறைமுகம் பகுதியில் ெரயில்வே ஜங்ஷன் உள்ளது. இங்கு பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் உள்ளது. கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல் தொழிற்சாலை, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை, அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளது.இப்படி கடலூரில் மற்றும் கடலூரை சுத்தி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு ஹோட்டல்கள், சுற்றுலா தலமான சில்வர் பீச் போன்றவற்றை உள்ளடக்கியது கடலூர். இப்படி முக்கியமானதாக இருந்தாலும் அனைவரும் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சாலை கடலூரில் மிக மோசமாக உள்ளது.

இந்த சாலை கடலூரிலும், பல்வேறு தொழிலை உள்ளடக்கிய துறைமுகத்திலும் சாலை மிக மோசமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செய்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மோசமான நிலையில் உள்ள சாலையால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மோசமான சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News