உள்ளூர் செய்திகள்

கல்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-06-16 15:40 IST   |   Update On 2022-06-16 15:40:00 IST
  • சதீஷ் தனது புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி இருந்தார்.
  • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது விலை உயர்ந்த புதிய மோட்டார் சைக்கிளை, புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அடகு நகை கட்டிடம் முன்பு நிறுத்தி விட்டு முதல் மாடிக்கு சென்றார்.

பின்னர் கீழே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. கல்பாக்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News