உள்ளூர் செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: வியாபாரி பலி மேலும் ஒருவர் படுகாயம்

Published On 2023-07-27 07:33 GMT   |   Update On 2023-07-27 07:33 GMT
  • ராஜசேகர்,சக்திவேல் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்
  • பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விழுப்புரம்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 53). வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் (45). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் - புதுவை 4 வழிச்சாலையில் காட்ராம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களுக்கு முன்னால் சவுக்கு கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, எடை போடுவதற்காக எடைமேடைக்கு திரும்பியது. இதனை எதிர்பாராத சக்திவேல் நிலைதடுமாறி, மோட்டார் சைக்கிளுடன் லாரி மீது மோதினார்.

விபத்தில் ராஜசேகர், சக்திவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், பலத்த காயமடைந்த சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் இன்ஸ்பெ க்டர் பாலமுரளி மற்றும் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News