உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-07-01 09:40 GMT   |   Update On 2023-07-01 09:40 GMT
  • பாலாஜி சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
  • இன்று அதிகாலையில் பாலாஜியின் மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

சென்னை:

சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது25). சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். அதை நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

இன்று அதிகாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News