போலீஸ் வாகனம் மோதி தாய்-மகன் காயம்
- அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது.
- சென்னம் மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப் பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சுண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி சென்னம்மாள் (வயது50). இவரது மகன் பத்மநாபன் (25). இந்த நிலையில் தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து மத்தூருக்கு வந்தனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை-பெங்களூரு சாலை அந்தேரிப்பட்டி கூட்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென்று அவர்கள் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சென்னம்மாளையும், பத்மநாபனையும் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னம்மாளின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய போலீசாரை கண்டித்து அந்தேரிப்பட்டி கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை மற்றும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.