உள்ளூர் செய்திகள்

விருதாச்சலம் பெரியகாப்பான்குளம் பகுதியை சேர்ந்த கற்பகம் தனது 2 பெண் பிள்ளைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்,

2 பெண் பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து வாழ்வதாக கலெக்டரிடம் தாய் மனு

Published On 2023-02-06 10:14 GMT   |   Update On 2023-02-06 10:14 GMT
2 பெண் பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து வாழ்வதாக கலெக்டரிடம் தாய் மனு

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இ

ன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுவினை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர். அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் பெரிய காப்பான்குளம் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி கற்பகம். தனது 2 மகள்களுடன் பள்ளிச் சீருடையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் எனது கணவர் அருள்தாஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மகள்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு எங்களை வீட்டில் இருக்கக் கூடாது என கூறி மிரட்டி வருகின்றார். இதன் காரணமாக நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றோம். இது தொடர்பாக மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் எனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கும், எனது மகள்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகாமல் இருப்பதற்கும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்  இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News