உள்ளூர் செய்திகள்

வீரவநல்லூரில் வாலிபரின் மொபட் திருட்டு

Published On 2022-06-11 09:43 GMT   |   Update On 2022-06-11 09:43 GMT
  • வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அவர் கடைக்கு சென்ற சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.
  • வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நெல்லை:

அம்பை புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்துரை(வயது 31). தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற பால்துரை சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை.

இது தொடர்பாக அவர் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News