உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

Published On 2023-03-17 15:12 IST   |   Update On 2023-03-17 15:12:00 IST
  • கத்தியை காட்டி மிரட்டி ஷக்கில்புல்இஸ்லாமிடம் பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர்.
  • சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், விக்னேஷ்யை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் எலசகிரி பகுதியை சேர்ந்தவர் ஷக்கில்புல்இஸ்லாம் (வயது23) இவர்

நேற்று சிப்காட் பேடரப் பள்ளி ஆஞ்சநேயர்கோவில் அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பேடரப் பள்ளி பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (25), விக்னேஷ் (20) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ஷக்கில்புல்இஸ்லாமிடம் பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், விக்னேஷ்யை கைது செய்தனர்.

Tags:    

Similar News