காரிமங்கலத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு
- உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.
- நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய வசதிகள் உள்ளன.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் சென்று உணவு பொருள்களில் கலப்படம் கண்டறிதல், தரம் அறிதல் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்டோர் குழுவாக சென்று காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.
இதில் காரிமங்கலம் அரசு மகளிர் அறிவியல் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை பேராசிரியர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் செந்தில்குமார் மற்றும் கவுரவ விரிவுரையாளர் தனலட்சுமி, கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் கல்லூரி மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை முன் நிறுத்தி உணவுப் பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிய வசதிகள் உள்ளன.
வாகனத்தில் உள்ள ஆய்வக பரிசோதனை மூலம் உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை மேற் கொண்டு தரமான பொருட்கள் நுகர்வோரை சென்றடைய முயற்சி மேற்கொள்ளும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு தொடர்ச்சி யாக மாவட்டம் முழுவதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பாது காப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரி வித்தார்.