சூரங்குடி-எட்டையபுரம் வரை சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான இடத்தை எம்.எல்.ஏ. ஆய்வு
- மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
விளாத்திகுளம்:
மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் விளாத்திகுளம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் முயற்சியாக விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சூரங்குடி- எட்டையாபுரம் வரையிலான சுமார் 35 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான சாலை ஓரங்களில் உள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.