உள்ளூர் செய்திகள்

கண்மாய் படித்துறையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் - எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2023-03-19 12:23 IST   |   Update On 2023-03-19 12:23:00 IST
  • மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
  • நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்:

புதூர் ஊராட்சி ஒன்றியம், மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ராம்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும், ரூ.9.15 லட்சம் கிராம கண்மாயில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள படித்துறை யையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி, கிளை செயலாளர் கனகராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News