உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் மாயம்
- ஒரு வருடமாக அதே கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
- வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஜெயம் (26). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 6 வயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. தனது கணவரின் தொடர் குடிப்பழக்கத்தால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டு ஜெயம் கடந்த ஒரு வருடமாக அதே கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த ஜெயம் திடீரென்று காணவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ஜெயம் தந்தை ஜெயபால்பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு), எஸ்.ஐ.சரண்யாவழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.